சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Saturday, May 11, 2013

நல்ல ரசிகனின் கடமை


காலஞ்சென்ற விடுதலை போராட்டத்தியாகி திருப்பூர் குமரனின் மனைவி ராமாயி அம்மாளை நான் அடிக்கடி சென்று சந்திப்பது, சில சமயம் பத்திரிக்கைக்காக பேட்டி எடுப்பதும் என் வழக்கம். என்னையும் அவர் தன் மகனைப் போலவே பாவித்து வந்தார். திரைப்படங்களையே தன் வாழ்நாளில் பார்த்திராத அவர், ஒருநாள் என்னை அழைத்து தான் திரைப்படம் பார்க்க விரும்புவதாக தெரிவித்தார். நானும் அவரை அழைத்துக் கொண்டு என் விருப்பமான நடிகர் சிவாஜி கணேசன் அவர்களின் ராஜபாட் ரங்கதுரை திரைப்படத்திற்கு சென்றோம். படத்தில் ஒருகாட்சியில் சிவாஜி திருப்பூர் குமரன் வேடமிட்டு வருவார். காட்சியின் முடிவில் காவலர்கள் அவரை தடியால் அடித்து அவர் கீழே விழுந்து இறப்பார். இக்காட்சியைப் பார்த்த ராமாயி அம்மாள் அக்கணமே திரையரங்கில் மயக்கம் போட்டு சாய்ந்தார். பின் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று காரணம் கேட்டபோது அவர் சொன்னதாவது, “என் கணவர் இறந்தபோது எனக்கு பன்னிரெண்டரை வயது, பக்குவப்படாத பருவம். என் கணவரின் நடை,உடை பாவனை கூட என் மனதில் சரியாக பதியாத வயது. அவர் இறந்த அன்று கூட அவ்வளவு துக்கப்படவில்லை. இன்று திரைப்படத்தில் அந்த நடிகர் நடித்தது என் கணவர் போலவே பட்டது, அவர் காட்சியில் இறந்து விழுந்த போது என்கணவர் இறந்த போது எழாத துக்கம் மேலெழுந்து கீழே சரிந்தேன்” என்றார். தான் உயிருடன் இருக்கும் வரை இதை எழுத வேண்டாம் என்று என்னிடம் கேட்டுக் கொண்டார். பின்னாளின் அவர் காலமானபின் இதை நான் பத்திரிக்கையில் எழுதியிருந்தேன். எழுதிய சில மாதங்கள் கழித்து என்னை அலுவலகத்தில் இருந்து திரையரங்கத்திற்கு அனுப்பி அப்போது வெளியாகியிருந்த சிவாஜி கணேசனின் லாரி ட்ரைவர் ராஜாகண்ணு படத்தைப் பற்றி விமரிசனம் எழுதச்சொன்னார்கள். படத்தைப் பார்த்து ஒரு நல்ல சினிமா ரசிகன் என்ற முறையில் எழுத ஆரம்பித்தேன், ”இப்படத்தில் கதை இருக்கிறது என்று சொன்னால் என் பேனா சதை இருக்கிறது என்று எழுதுகிறது, இப்படத்தில் நடித்திருக்கிறார்கள் என்று சொன்னால் என் பேனா கடித்திருகிறார்கள் என்று எழுதுகிறது”, இப்படியாக தமிழ் சினிமா காணாத ஒரு மிக மோசமான படம் என்ற முறையில் விமரிசனம் எழுதி பிரசுரமும் ஆகிவிட்டது. தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்ட நடிகர் திலகம் என்னை யார் என்று விசாரித்தார், பின் நான் தான் ராமாயி அம்மாளைப் பற்றியும் எழுதியவன் என்று தெரிந்து கொண்டு, “என்னையா ஒன்னு ஒரேடியா தூக்கி வச்சி எழுதுறீங்க, இல்லை போட்டு ஒரேடியா கவுத்தீட்றீங்க” என்று சற்று வருத்தம் தோய்ந்த குரலில் கேட்டுக் கொண்டார். அவரிடம் மிகப் பணிவாக நான் ”ஐயா, நான் உங்க தீவிர ரசிகன், நீங்க இனிமே இதுபோன்ற படங்களில் நடிப்பதை தடுப்பதே என்னைப்போன்ற நேர்மையான ரசிகனின் கடமை, மன்னிக்கனும்” என்றேன். எனது விண்ணப்பத்தையும் ஏற்றுக் கொண்டார் நடிகர் திலகம்.

--ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் எழுத்தாளர்/சினிமா விமர்சகர்/பத்திரிக்கையாளர் திருப்பூர் கிருஷ்ணன் கூறியது.

----நமது விருப்பத்திற்குரிய நடிகர் நடிக்கும் நாராசமான படங்களைக் கூட தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதன் மூலம் சினிமாவை அழிவுப்பாதைக்குக் கொண்டு செல்கிறோம். மண்டையில் ஊறுகாய் அளவுக்கு மூளையிருக்கிறவன் கூட அப்பிடி செய்ய மாட்டான். இதை நான் எழுதுறதுக்கு காரணம் நேத்து ரெண்டு வெ.மா.சூ.சொ இல்லாத பார்ட்டிங்க, ”பில்லா II” நல்லபடமா, ”சுறா” நல்ல படமான்னு சண்டைபோட்டுகிட்டானுங்க!!!

சொலவடை