சைக்கிள்காரன்
உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....அன்பே சிவம்
......
திண்ணை

இது உங்கள் வீட்டு திண்ணை
தினமொரு திருக்குறள்
ஏன்யா பணத்த மட்டும் கரெக்டா பேங்கில போடுறீங்களே!! அதுமாதிரி குப்பையையும் குப்பத்தொட்டில போட்டா என்ன?
— சைக்கிள்காரன் (@CycleKaaran) February 1, 2013
Sunday, July 28, 2013
Friday, July 5, 2013
நான் யார்?
நான் யார்?
என் கண்ணாடியில்
தினம் தெரியும் பிம்பமா?
வெளிச்சத்தில் என்னுடன்
நடந்து வரும் நிழலா?
உணவுக்கு கவளங்கள்
என் வயிற்றை
நிரப்பிக் கொண்டே போயின!
என்னைப் பற்றிய
கேள்விகள் என் மனதை
நிரப்பிக் கொண்டே போயின!
புத்தனைப் படி
உன்னை அறிவாய் என்றார்கள்
புத்தனோ கண்மூடித்தனமாக
என்னை பின் தொடராதே
என்று கூறி விரட்டிவிட்டான்
நகுலன்தான் என்னில்
இப்படியெல்லாம்
கிளர்ச்சியேற்படுத்தியவன்
ஆக அவன் சொன்னதுபோல்
என்னிடம் நானே கேட்டுப் பார்த்தேன்
நான் யார்? என்று
அப்படியும் அறிந்தபாடில்லை!!!
நான் இறந்தபின்
என் சவக்குழியின் மேல்
எழுதிவைப்பார்கள்
நான் யாரென்று
அப்போது வந்து
பார்த்துக் கொள்கிறேன்!
என் கண்ணாடியில்
தினம் தெரியும் பிம்பமா?
வெளிச்சத்தில் என்னுடன்
நடந்து வரும் நிழலா?
உணவுக்கு கவளங்கள்
என் வயிற்றை
நிரப்பிக் கொண்டே போயின!
என்னைப் பற்றிய
கேள்விகள் என் மனதை
நிரப்பிக் கொண்டே போயின!
புத்தனைப் படி
உன்னை அறிவாய் என்றார்கள்
புத்தனோ கண்மூடித்தனமாக
என்னை பின் தொடராதே
என்று கூறி விரட்டிவிட்டான்
நகுலன்தான் என்னில்
இப்படியெல்லாம்
கிளர்ச்சியேற்படுத்தியவன்
ஆக அவன் சொன்னதுபோல்
என்னிடம் நானே கேட்டுப் பார்த்தேன்
நான் யார்? என்று
அப்படியும் அறிந்தபாடில்லை!!!
நான் இறந்தபின்
என் சவக்குழியின் மேல்
எழுதிவைப்பார்கள்
நான் யாரென்று
அப்போது வந்து
பார்த்துக் கொள்கிறேன்!
Subscribe to:
Posts (Atom)