ஏக் காவ் மேம் ஏக் கிசான் ரகதாத்தா பெரும்பாலான தமிழர்களுக்கு தெரிந்த ஒரே
இந்தி வார்த்தை. நான் கொல்கத்தா சென்றடைந்தபோது எனக்கும் அந்த வார்த்தையை
தவிர இந்தியில் வேறொன்றும் தெரியாது. இப்பிடித்தான் ஒருநாள் ஓட்டலுக்கு
போகச்ச வாசல்ல இருந்த செக்யுரிடி ஆவோஜினு சொன்னான் , அது நான் இல்லீங்கனு
நான் சொல்ல. உடனே என் நண்பன் டே ஆவோஜினா உள்ள வாங்கனு அர்த்தம்டா.ஓ
அப்பிடியா நான் ஏதோ ராம்ஜி பிரேம்ஜி மாதிரி பேருன்னுல நெனைச்சேன்.
இப்பிடியே கேவலமா போயிட்டு இருந்தது வாழ்க்கை. ஏதோ டீகே , அச்சான்னு ரொம்ப
சிம்பிளான வார்த்தைகள மட்டும் கத்துக்கிட்டேன்.அழகான பொண்ணுங்ககிட்ட
அட்ரெஸ் கேக்குற அளவுக்காவுது இந்தி கத்துக்கணும்னு ஒரு ஆசை. ஊர்ல இருந்தப்
போது ஓயாம வாயடிகிட்டு இருந்தேன். இங்க வந்து பெரும்பாலும் தனியாதான்
பேசிருக்கேன். இந்தில யாராவது பேசுனாக் கூட பெரும்பாலும் தமிழ்ல தான் பதில்
சொல்றது. இந்த ஊர் பயபக்கிக சில பேருக்கு தமிழ் சொல்லிக்குடுத்தும்
இருக்கேன். ஆனா எக்காரணம் கொண்டும் அவிங்களுக்கு கெட்ட வார்த்தை சொல்லிக்
குடுக்குறது இல்ல. பின்னாடி நம்மளையே திட்டினாலும் திட்டிருவானுக. மாதங்கள்
கடந்தன நல்ல சாப்பாடு சாப்டாம நாக்கும், நல்ல தமிழ் கேட்க முடியாம காதும்
சாகத் தொடங்கின.எங்க ஊட்ல தோசை கொஞ்சம் முருகலா இல்லைன்னாலும தோசை தட்டோட
பறக்கும். இங்க வந்து ஒரு தோசை திங்கிறதுக்கு கட கடையாய் ஏறி எறங்கி கடசியா
ஒரு பீத்த கடையில் அம்பது ரூபா குடுத்து தோசைங்கிற பேர்ல ஏதோ ஒன்ன
தின்னுட்டு வந்தேன்.இந்த வெளி மாநில வாசம் எனக்குச் செய்த மிகப்பெரிய
புண்ணியம் என் மாநிலத்தின் அருமையை எனக்கு எடுத்துரைத்ததே. இந்த ஊர்
சாப்பாடு ஒவ்வொரு நாளும் சொல்லிக் குடுத்த பாடம் என் அம்மாவின் சமையலே
சிறந்ததென்று.
இந்த ஊரிடம் நான் கற்றுக் கொண்டது நிறையவே.ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் சத்யஜித் ரே, விவேகானந்தர்,ரபீந்திரநாத் தாகூர்,பங்கிம் சந்திரா சட்டர்ஜியின் புகைப்படங்கள். பழைமையை மிகவும் மதிக்கத் தெரிந்தவர்கள். உதாரணத்திற்கு இவர்கள் விவாசய நிலம் எதையும் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு கொடுக்கவில்லை. மாறாக ஊருக்கு வெளியே குப்பை கொட்டும் பீக்காடாய் இருந்த நிலப்பரப்பை கம்ப்யூட்டர் கம்பெனிக்கு கொடுத்துவிட்டார்கள். ஒருவேள ரெண்டும் ஒண்ணுதான்னு நெனைச்சிருப்பாய்ங்களோ அதுபோகட்டும்.இங்கே விவசாயம் எந்த அளவிற்கும் பாதிக்கப்படவில்லை. உருளை கிழங்கு கிலோ ஏழு ரூபாய். சாத்துக்குடி கிலோ ஐந்து ரூபாய். நான் கற்றுக் கொள்ள நிறையவே இருந்தது அந்த மக்களிடம்.
எனக்குள் அடிக்கடி எழும் ஒரு கேள்வி. நாம எல்லாம் நல்ல படிச்சி வேலைக்கு சேந்துட்டோம். அப்பிடியே சென்னை போன்ற பெருநகரங்களில் வீடு வாங்கிசெட்டில் ஆக வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கனவும்கூட. சரி சென்னையில வீடு வாங்கி செட்டிலும் ஆயிட்டோம்.நம்ம புள்ளைங்கள சென்னையில சிறந்ததா ஒரு பள்ளிக் கூடத்துல சேத்தும் விடுவோம். எப்பவாது தாத்தா ஊருக்கு போவோம்னு அவனை நம்ம சொந்த ஊருக்கு கூட்டிபோவோம். அவனுக்கு அங்க விளையாட வீடியோ கேம் கூட இல்லாம போரடிக்கும். அவனும் வளந்து பெரியாளா ஆயிடுவான்,நாம சென்னையில செட்டில் ஆக ஆசைப்பட்ட மாதிரி அவனும் வெளிநாட்டுல செட்டில் ஆக ஆசைப் படலாம்.அப்புறம் நம்ம பேரனக் கூட்டிட்டு அவனும் எப்பவாவது தாத்தா நாட்டுக்கு வருவான். நல்லா கவனிங்க இன்னும் அம்பது வருசத்துல பல பேருக்கு இந்தியா தாத்தா நாடு ஆயிடும்.இப்பவே பாதி பேருக்கு ஆயிடுச்சு.அப்போ தென் தமிழகத்தில ஏதோ ஒரு மூலையில இருக்கிற என் ஊர் என்னவாயிருக்கும் அங்க யார் இருப்பாங்க. இது தான் என்னுள் எழுந்த கேள்வி. கொஞ்சம் பெரிய கேள்விதான். ஆனால் என்னால் இதற்கு விடை கண்டு பிடிக்க முடியும். இதையெல்லாம் ஒரு பெரு நகரத்தில் வாழ்ந்து இல்லை பிழைத்துக் கொண்டிருக்கும் எனக்கு சொல்ல கொஞ்சம் கூட தகுதி இல்லை. ஆனால் என்னுடைய பயணம் என் சொந்த ஊரை நோக்கியே இருக்கும்.இது கூட இந்த பெரு நகரங்கள் எனக்கு சொல்லிக் கொடுத்த பாடமே.
இந்த ஊரிடம் நான் கற்றுக் கொண்டது நிறையவே.ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் சத்யஜித் ரே, விவேகானந்தர்,ரபீந்திரநாத் தாகூர்,பங்கிம் சந்திரா சட்டர்ஜியின் புகைப்படங்கள். பழைமையை மிகவும் மதிக்கத் தெரிந்தவர்கள். உதாரணத்திற்கு இவர்கள் விவாசய நிலம் எதையும் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு கொடுக்கவில்லை. மாறாக ஊருக்கு வெளியே குப்பை கொட்டும் பீக்காடாய் இருந்த நிலப்பரப்பை கம்ப்யூட்டர் கம்பெனிக்கு கொடுத்துவிட்டார்கள். ஒருவேள ரெண்டும் ஒண்ணுதான்னு நெனைச்சிருப்பாய்ங்களோ அதுபோகட்டும்.இங்கே விவசாயம் எந்த அளவிற்கும் பாதிக்கப்படவில்லை. உருளை கிழங்கு கிலோ ஏழு ரூபாய். சாத்துக்குடி கிலோ ஐந்து ரூபாய். நான் கற்றுக் கொள்ள நிறையவே இருந்தது அந்த மக்களிடம்.
எனக்குள் அடிக்கடி எழும் ஒரு கேள்வி. நாம எல்லாம் நல்ல படிச்சி வேலைக்கு சேந்துட்டோம். அப்பிடியே சென்னை போன்ற பெருநகரங்களில் வீடு வாங்கிசெட்டில் ஆக வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கனவும்கூட. சரி சென்னையில வீடு வாங்கி செட்டிலும் ஆயிட்டோம்.நம்ம புள்ளைங்கள சென்னையில சிறந்ததா ஒரு பள்ளிக் கூடத்துல சேத்தும் விடுவோம். எப்பவாது தாத்தா ஊருக்கு போவோம்னு அவனை நம்ம சொந்த ஊருக்கு கூட்டிபோவோம். அவனுக்கு அங்க விளையாட வீடியோ கேம் கூட இல்லாம போரடிக்கும். அவனும் வளந்து பெரியாளா ஆயிடுவான்,நாம சென்னையில செட்டில் ஆக ஆசைப்பட்ட மாதிரி அவனும் வெளிநாட்டுல செட்டில் ஆக ஆசைப் படலாம்.அப்புறம் நம்ம பேரனக் கூட்டிட்டு அவனும் எப்பவாவது தாத்தா நாட்டுக்கு வருவான். நல்லா கவனிங்க இன்னும் அம்பது வருசத்துல பல பேருக்கு இந்தியா தாத்தா நாடு ஆயிடும்.இப்பவே பாதி பேருக்கு ஆயிடுச்சு.அப்போ தென் தமிழகத்தில ஏதோ ஒரு மூலையில இருக்கிற என் ஊர் என்னவாயிருக்கும் அங்க யார் இருப்பாங்க. இது தான் என்னுள் எழுந்த கேள்வி. கொஞ்சம் பெரிய கேள்விதான். ஆனால் என்னால் இதற்கு விடை கண்டு பிடிக்க முடியும். இதையெல்லாம் ஒரு பெரு நகரத்தில் வாழ்ந்து இல்லை பிழைத்துக் கொண்டிருக்கும் எனக்கு சொல்ல கொஞ்சம் கூட தகுதி இல்லை. ஆனால் என்னுடைய பயணம் என் சொந்த ஊரை நோக்கியே இருக்கும்.இது கூட இந்த பெரு நகரங்கள் எனக்கு சொல்லிக் கொடுத்த பாடமே.
தினங்காலையில்
பள்ளிக்குக் செல்லும்முன்
பெட்டிக்கடை பாட்டியிடம்
வாங்கி தின்னும்
புளிப்பு மிட்டாயின் சுவை
வந்து மறைகிறது
அடிநாக்கில்
பள்ளிக்குக் செல்லும்முன்
பெட்டிக்கடை பாட்டியிடம்
வாங்கி தின்னும்
புளிப்பு மிட்டாயின் சுவை
வந்து மறைகிறது
அடிநாக்கில்
என் ஊரின் ஞாபகம்
வரும்போதெல்லாம்
வரும்போதெல்லாம்
ரொம்ப தீவிரமா சிந்திச்சிருக்கீங்க போல...
ReplyDelete;-)))
Deleteநல்ல சிந்தனை. பெரும்பாலான ஆண்களுக்கு வெளிமாநிலங்களில் போய் தங்கினால் தான் தங்களின் அம்மா மற்றும் குடும்பத்தின் மதிப்பு தெரிகிறது :) உங்கள் கொல்கொத்தா வாழ்க்கையைப் பற்றி விரிவாக எழுதுங்கள்.
DeleteWell said. Happy to hear abt your experience. Back home is a good feeling. Longing for that day still .
ReplyDelete