சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Wednesday, April 4, 2012

பாட்டிக்கு ஒரு பாட்டு


என் பெற்றோருக்கு மகனாய்
இருக்க விருப்பமில்லை
என் காதலிக்கு காதலனாய்
இருக்க விருப்பமில்லை
என் நண்பனுக்கு நண்பனாய்
சொந்தங்களுக்கு உறவாய்
கவிஞனாய் ,மருத்துவனாய் ,சிற்பியாய்
எதுவாகவும் இருக்க விருப்பமில்லை
கடைசிவரை எனக்கு பாட்டியாய்
இருந்த உனக்கு மட்டும் பேரனாய்
இருந்துவிட்டு போகிறேன்
இறந்து விட்டுப் போகிறேன்
என்னை வளர்த்து விட்டு  நீ மட்டும்
குழந்தையாகி கொண்டே போகிறாய்
நாள்தோறும்  ....



 எங்கள் வீட்டில் 
பாயைக்கூட அவ்வப்போது 
விரித்து வைப்பார்கள் 
ஆனால் எங்கள் 
பாட்டியை எப்போதும்
சுருட்டியே வைத்திருப்பார்கள்
அரவணைக்க ஆளில்லாத 
பாட்டி கருவறையில் 
கிடக்கும் சிசுவைப்  போல் எப்போதும்
சுருண்டே இருக்கிறாள்.

No comments:

Post a Comment

சொலவடை