சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Wednesday, April 4, 2012

ஒரு 'ஈ' இன் ஆவி - - - அதிரவைக்கும் உண்மைச் சம்பவம்


                       இரவு ஒன்பது மணி இருக்கும், லேசாக முழிப்பு தட்டியது, நன்றாக தூங்கி விட்டதால் ஹாஸ்ட்டலில் இரவு உணவை தவற விட்டேன்.
பசி வயிற்றை கிள்ளியது. மெஸ்சுக்கு போனா ஒண்ணுமே இருக்காதே, நைட்டு தோசை போட்ருப்பாங்க, அது முடிஞ்சிருக்கும் ஆனா தயிர் சாதம் மிச்சம் இருக்கும் என்ற நம்பிக்கையில் கிளம்பினேன். முகத்தை கழுவி விட்டு மெஸ்சுக்கு விரைந்தேன். மெஸ் அறைக் கதவுகளை திறந்து, இருட்டை விரட்ட விளக்குகளை ஆன் செய்தேன்.
                           சுமார் 30 செ.மீ விட்டம் கொண்ட அந்த வட்டத் தட்டை எடுத்து கழுவுவதற்காக சென்றேன். மெல்ல குழாயை திறந்தேன்.  யாருமில்லாத மெஸ்ஸில் குழாயில் இருந்து வரும் தண்ணீர் அருவி போல இரையத் தொடங்கியது. அந்த இரைச்சலைக் காட்டிலும் பேரிரைச்சலாய் என் காதுகளில் அந்த ரீங்காரம் கேட்கத் தொடங்கியது. அது ஒரு ஈ எழுப்பும் ஓசையை போலிருந்தது. என் தலையை சுற்றும் முற்றும் திருப்பிப் பார்த்தேன், அங்கு ஈ போல ஏதும் காணப் படவில்லை. என் காதுகளை நன்றாக குடைந்து எடுத்தும், ரீங்காரம் விடுவதாயில்லை. பசியோடு இருந்ததால் அந்த ரீங்காரத்தை பொருட் படுத்தாமல் , தட்டு நிறைய தயிர் சாதத்தை அள்ளிப் போட்டு , நான்காவது டேபிளில் போய் அமர்ந்தேன். நான், என் தயிர் சாதம், மின்னி மின்னி எரியும் ட்யூப் லைட் தவிர வேறு யாரும் இல்லை, இருந்தாலும் அந்த ரீங்காரம் கேட்டுக் கொண்டே இருந்தது. அது ஈக்களின் பேரிரைச்சல் அல்ல. பேயிரைச்சல் போல இருந்தது. எதையும் பொருட்படுத்தாமல் தயிர் சாதத்தை தின்னத் தொடங்கினேன். தட்டை வழித்துத் தின்ற பின் மெல்ல தலையை உயர்த்தினேன். என் தட்டிற்கு மிக அருகில் ஒரு ஈ செத்துக் கிடந்தது , அது எப்படி இறந்திருக்கும் என்று ஆராய்ச்சி செய்ய விரும்பாமல் இன்னொரு தட்டு தயிர் சாதத்தை அள்ளிப் போட்டுக் கொள்ள கிளம்பினேன். "ஆமா , இந்த செத்த ஈக்கும் , நம்ம காதுல கேக்குற சத்தத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ ? அடச்சே, மனுசப்பயலுக பேயுக்கே அசரமாட்டோம், இது சாதாரண ஈ பேய்தான " என்று நினைத்துக்கொண்டே தயிர் சாதத்தை அள்ளிப் போட்டுக் கொண்டு மறுபடியும் அதே டேபிளில் அமர்ந்தேன்.
                         சற்று முன் அங்கே செத்துக் கிடந்த ஈயின் சடலத்தை காணவில்லை, இருந்தாலும் நான் தயிர் சாதத்தை விடாதவனாய் அள்ளி வாயில் வைக்கப் போனேன், இப்போது ஈக்கள் என் மூளையிலே உக்காந்து கத்துவது போல பேரிரைச்சல். அப்போது தான் அந்த கோரக் காட்சி என் கண்களில் பட்டது. என் வாய்க்கு மிக அருகில் தயிர் சாதக் கவளம், அதனுள்ளே நான்கைந்து செத்த ஈக்கள். அந்த கவளத்தை எறிந்து விட்டு தயிர் சாத சட்டியை நோக்கி ஓடினேன் கரண்டியை எடுத்து தயிர் சாதத்தின் ஆழம் வரை நோண்டினேன், என் கண்கள் மிரண்டன, ரத்தம் உறைந்தது. தோண்டத் தோண்ட ஈக்களின் சடலங்கள்.
                           பின் ஒரு மாத காலத்துக்கு எங்கே போனாலும் தயிர் சாதத்தை தவிர்த்தேன். எங்கள் மெஸ் தயிர் சாதத்தை முற்றிலும் நிறுத்தி விட்டேன்..

No comments:

Post a Comment

சொலவடை