சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Wednesday, April 4, 2012

இதைப்பற்றி எழுதியே ஆக வேண்டும்


                        நான் இதைப் பற்றி எழுதியே ஆகவேண்டும். ஆனால் இதைப் பற்றி படிக்க வேண்டிய கட்டயாம் உங்களுக்கு இல்லை. 
                              நாங்கள் வாழும் வாழ்க்கை பெரும்பாலும் இருட்டில் ஆரம்பித்து அதிகாலையில் முடிந்து விடுகிறது.  நிலா எங்களுக்கு சூரியனாகவும், சூரியன் எங்களுக்கு நிலாவாகவும் செயல் படுகிறது. அதிகாலை நேரத்தில் களைப்புடனும் கொட்டாவியுடனும் உறங்கச்செல்வோம். அந்தி வேளையில் தான் எங்கள் காலை உணவு. நடு இரவில் பேய் கூட உறங்கச் செல்லும் நேரத்தில் தான் எங்கள் மதிய உணவு. அதிகாலையில் இரவு உணவு உண்ணும் ஒரே ஜீவராசிகள் அதாவது பிராணிகள் நாங்கள் தான்.
                      எங்களது வார இறுதி நாட்கள் பெரும்பாலும் தூக்கத்திலேயே கழிந்து விடும். வார நாட்கள் துக்கத்திலேயே கழிந்துவிடும். எங்கள் கண்கள் பெரும்பாலும் ரத்த சிவப்பு நிறத்திலேயே காணப்படும். எங்களது இதயத்தில் எப்பொழுதும் ஒரு வலி இருந்து கொண்டே இருக்கும். மயான அமைதிக்கு நடுவில் நாங்கள் வேலை பார்ப்பதால் எங்கள் இதயம் துடிப்பது கூட பெரும் இரைச்சலாகவே தோன்றும்.
                         நாங்கள் யார்? இரவு நேர கோட்டான்களா? கள்ளர்களா? இல்லை மயான வெட்டியான்களா?   இது எங்கள் பொருளாதாரக் கோளாறு மட்டும் இல்லை பூலோகத்தின் கோளாரும் கூட. இந்தியாவில் இரவையும் அமெரிக்கவில் பகலையும் வைத்த இறைவனின் கோளாரும் கூட. நான் இதைப் பற்றி எழுதியே ஆகவேண்டும். ஆனால் இதைப் பற்றி படிக்க வேண்டிய கட்டயாம் உங்களுக்கு இல்லை.
                                                                                         இப்படிக்கு  இங்கிருந்தே அமெரிக்காவிற்கு வேலை பார்க்கும் கையாளாகத கணிப்பொறி விஞ்ஞானி.

No comments:

Post a Comment

சொலவடை