சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Wednesday, April 4, 2012

தமிழ்


யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
   இனிதாவது எங்கும் காணோம்
பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்
   இகழ்ச்சி சொல்லப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு
   வாழ்ந்திடல் நன்றோ? சொல்வீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம்
   பரவும் வகை செய்திடல் வேண்டும்

யாமறிந்த புலவரிலே கம்பமைப் போல்
   வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை;
    உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை;
ஊமையராய் செவிடராய் குருடர்களாய்
   வாழ்கின்றோம் ஒருசொல் கேளீர்
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
   தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
   தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
   தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
   சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டார்
    அதை வணங்கச்செய்தல் வேண்டும்.


உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
   வாக்கினிலே ஒளி உண்டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப் பெருக்கும்
   கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வாழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
   இங்கமரர் சிறப்புக் கண்டார்.

                                                      - மகாகவி பாரதி

No comments:

Post a Comment

சொலவடை