சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Wednesday, April 4, 2012

உடல்


கவலைகள் நீக்கப்பட்ட என் மனம் மிக லேசாக்கப் பட்டதாக உணர்ந்தேன். மெல்லிய மனங்கொண்ட என்னால் சதை நிரம்பிய என் உடலை தூக்கி சுமக்க முடியவில்லை. இந்த உடலை ஏதேனும் ஆற்றில் கடாசிவிடலாம் என்று நினைத்து ஆற்றுப் படுகைக்கு விரைந்தேன். ஆற்றில் போட்டால் இந்த சதை ஊறி யாருக்கும் உபயோகப் படாமல் போய் விடுமே. அதனால் பக்கத்தில் இருந்த அந்த கொடிய மிருகங்கள் வசிக்கக் கூடிய காட்டிற்குள் நுழைந்தேன். என் உள்ளங்கையை முள்ளால் கீறி ரத்தத்தை வட்டமாக பீய்ச்சி நடுவில் அமர்ந்தேன். அரைமணி நேரம் கண் மூடி இருளில் பயணித்தேன். என் நெற்றிப் பொட்டில் என் மனத்தை ஏற்றினேன். சட்டென்று பின்னாலிருந்து ஒரு புலி என்னை தாக்கியது. கன நேரத்தில் என்னை மூன்று புலிகள் சூழ்ந்து கொண்டன. என் சதைகளை அவை தின்னத் தொடங்கின. என் குரல் வளையை முதலில் குதறி விட்டதால் என்னால் கத்த முடியவில்லை. புலிகள் என் நெஞ்சை கீறி இதயத்தை சுவைக்கத் தொடங்கிய போது என் உயிர் வெளியேறியது. என் மனம் காற்றில் கலந்துவிட்டது. புலிகள் விட்டுச் சென்ற என் மிச்சத்தை நரிகள் வந்து சுவைக்க தொடங்கின. பின் வந்த காட்டு நாய்கள் என் எலும்பை கவ்விச் சென்றன. இவை அனைத்தயும் தின்ன ஆளில்லாத என் ஆன்மா அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்தது. பின் மரக் கிளைகளில் தாவி காட்டை சுற்றிப் பார்க்க கிளம்பியது.

No comments:

Post a Comment

சொலவடை