சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Wednesday, April 4, 2012

சிறகு முளைத்த கூட்டுப் புழு


என் உலகம் உருண்டையானதல்ல
அது கன சதுர வடிவமுடையது

அதில் காற்று இல்லை
மின்விசிறி இருக்கிறது

அதில் சூரியன் இல்லை
மின்விளக்கு இருக்கிறது

அங்கே குயிலோசை கேட்பதில்லை
அவ்வப்போது தொலைக்காட்சி இரைகிறது

என் உலகில் பக்கத்து தெரு மாமவின்
குழந்தையை இருந்த இடத்திலே
முகநூல் மூலமாக முத்தமிட வசதி இருக்கிறது

செயற்கையாய் செங்கலில் கட்டிய
என் உலகில் எல்லாம் இருக்கிறது.

இருந்தும் சில நாட்களாய்
அங்கே மின்சாரம் இல்லை.
எங்கும் ஒரே இருட்டு

வெறுத்து கண் அயர்கையில்
என் உலகின் கதவு திறக்கிறது
வெளியே ஓர் உருண்டையான
உலகம் எனக்காக காத்திருந்தது
அது மின்சாரத்தின் உதவி இல்லாமல்
இயங்கும் சக்தி பெற்றது

No comments:

Post a Comment

சொலவடை