சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Wednesday, April 4, 2012

பொங்குது பாரு காதலு


நீ ஓரக் கண்ணால் பார்த்தால்
போதும் இன்னும் ஓராயிரமாண்டுகளுக்கு
உன்னை ஒரு தலையாய் காதலிப்பேன்

உன்னை என்னால்
ஒரு தலையாய் தான்
காதலிக்க முடியும்
நான் என்ன ராவணனா
பத்து தலையாய் காதலிக்க

நீ ஹார்லிக்சை மட்டும் அல்ல
என்னையும் சாப்பிட்டு விட்டாய்
அப்படியே....

உன் பெயரை அதிகமாக
உச்சரித்ததாலோ என்னவோ
எனக்கு வந்து விட்டது
சக்கரை வியாதி....

உன் ஒவ்வொரு அசைவுகளையும்
என் கண்கள் பார்த்துக் கொண்டே
இருக்கும் அசையாமல்

இப்பிறவியில் மனிதனாக
பிறந்ததற்காக பெருமை
பட்டுக்கொள்ளாதே...
போன பிறவியில் நீதான்
அவளை கடித்த கொசு

உன்னை கடித்த மீன்கள்
இருந்த ஆற்றை கொளுத்த
முயன்று தோற்றவன் நான்

என் டைரி முழுக்க காதல் கவிதை
எழுதுவதாக சபதம் ,
ஒரு பக்கத்தை கூட விடக்கூடாது
பேனாவை எடுத்தேன்
முதலில் உன் பெயரைத்தான் எழுதினேன்
என்னவோ டைரி முழுக்க
கவிதை எழுதிவிட்டதாய் உணர்வு
மூடி வைத்து விட்டேன்
என் மனதை தவிர
மற்ற அனைத்தையும்

No comments:

Post a Comment

சொலவடை