சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Wednesday, April 4, 2012

முள்ளில்லாத கடிகாரம்


                     பரீட்ச்சை அன்னிக்கி கையில வாட்சு கட்டிட்டு எழுதப் போறது என்னோட வழக்கம். அதும் காலேஜுல சேரும் போது எங்கப்பா எனக்கு குடுத்த, அவங்கப்பா அவருக்கு குடுத்த பழைய கோல்டன் வாட்ச்ச கட்டிட்டு போனா கண்டிப்பா பாஸ் ஆஹிடலாம்னு ஒரு நப்பாசை. அப்பிடித்தான் அன்னிக்கி எக்ஸாமுக்கு அவசரமா கிளம்பிட்டு இருக்கும் போது கைதவறி கீழ விழுந்து வாட்ச்சு கண்ணாடி சுக்கு நூறாயிடுச்சு. நாம வாட்ச்சு கெட்டாம போயி, கொஸ்டின் கஷ்டமா வந்து நம்மளால நாலு பேரு ஃபெயிலா போயிட்டா என்ன பண்றது, அதனால உடைந்த வாட்ச்சயே கட்டிட்டு போயிட்டேன். நாலு எக்ஸாம் முடிஞ்சிறுச்சு, எல்லாம் நல்லா எழுதிட்டேன். ஆனா எக்சாமுக்கு ஒரு முள்ளா கழண்டு விழுந்ததுல , இப்போ வாட்ச்சுல முள்ளே இல்ல. கடைசி எக்ஸாம், வாட்ச்ச சரி பண்றதுக்கும் அப்போ கயில காசு இல்ல. என்ன பண்றது கடைசி எக்ஸாமுக்கு முள்ளே இல்லத வாட்ச்ச கையில கட்டி மறச்சி கிட்டே போனேன். எக்சாம் எழுதும்போது ஒரு எக்ஸாம் சூப்பர் வைசர் என்னையே சுத்திகிட்டு இருந்தாரு. எக்சாம் முடிஞ்சி வெளிய போம்போது அவர் எங்கிட்ட வந்து. தம்பி இது என்ன மாடல் வாட்ச்சு, முள்ளே இல்லியே , இதுல எப்பிடி மணி பாப்பனு கேட்டுட்டாரு. சார் இது மணி பாக்குற வாட்ச்சு இல்ல செண்டிமெண்ட் வாட்ச்சுனு சொன்னதும், தலயில அடிச்சுகிட்டே போயிட்டார். இந்த மொக்கயில இருந்து உங்களுக்கு என்ன தெரியுது? கடிகாரம் எதுக்கு வெறும் மணி பாக்குறதுக்கு மட்டுமா?

No comments:

Post a Comment

சொலவடை