சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Wednesday, April 4, 2012

கஹானி: कहानी : என் பார்வையில்


                           வெளிமாநிலம் சென்றதிலிருந்து தியேட்டருக்கு சென்று பார்த்த முதல் ஹிந்திப் படம்.
                           மிகவும் அருமையாக எடுக்கப்பட்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். கதையை வெகுவாக விவரிக்க விரும்பவில்லை. ஏனென்றால் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். கொல்கத்தாவை மிக்க அழகாக காட்டியுள்ள ஒரே படம் (எனக்கு தெரிந்த வரை). தன் கணவனை தேடி வெளிநாட்டில் இருந்து கொல்கத்தா வரும் புள்ளத்தாச்சி தமிழ் பெண் வித்யா பாலன்(அங்கதாம்ல வச்சுருக்காய்ங்க ட்விஸ்ட்டு).  ஒரே வரியில் கதையைப் பற்றி சொல்லப்போனால் இந்தப்படம் ஒரு பெண்கதாப்பாத்திரம் நடித்த உன்னைப் போல் ஒருவன் (ஒருத்தினு கூட வச்சுக்கலாம்).
                      படத்தில் தமிழ்ப்பெண்ணாக நடித்திருப்பதால் வித்யாபாலன் ஒரு காட்சியில் “இதுதான், இதுதான்” என்று அவசரத்தில் பேசுவது போல ஒரு வசனம் வரும். தியேட்டர்ல மத்த எவனுக்கும் புரியாத எனக்கு மட்டும் புரிஞ்ச ஒரே டயாலக் அதுதான். ஆனா இந்தப் படம் பாக்குறத்துக்கு இந்தி தெரிஞ்சிருக்க வேண்டிய அவசியம் இல்லை. காட்சிகள் அவ்வளவு கோர்வையாக வடிவமைக்கப் பட்டுள்ளது.
                     தென்னிந்தியாவிலிருந்து வட இந்தியா சென்று வித்யாபாலன் பல அருமையான திரைப்படங்கள் நடித்துவிட்டார். குறிப்பாக சொல்லப் போனால் உமன் சென்ட்ரிக் என்று சொல்லக்கூடிய பெண் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து எடுக்க கூடிய படங்கள் இனறையளவில் வெகுவாக குறைந்து வருகிறது. அவ்வகை படங்களுக்கு உயிர் கொடுக்கும் முயற்சியாக வித்யாபாலன் நடித்துவருவது மகிழ்ச்சியான விஷயம். நம்ம தமிழ் நாட்டுலயும் இதுபோன்ற பெண் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து நிறைய படங்கள் வந்து இருக்கின்றன. குறிப்பாக பாலச்சந்தர், பாலு மஹேந்திரா, மஹேந்திரன் மற்றும் மணிரத்னம் படங்கள். (வேணும்னா விஜயசாந்தி படத்தையும் சேத்துக்குங்க). ஆனா இப்போ பெருமளவில் இம்மாதிரி படங்கள் குறைந்து விட்டன. கஹானி நமக்கு சொல்லும் பாடம் நாமும் இதுபோல் படங்கள் எடுக்க முன் வர வேண்டும் என்பதே.
              இந்த விமரிசனத்தப் பற்றிய உங்கள் விமரிசனங்கள் வரவேற்கப் படுகின்றன.

No comments:

Post a Comment

சொலவடை