சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Wednesday, April 4, 2012

எங்கப்பாகிட்ட இருந்து யாராவது என்ன காப்பாத்துங்க


கோபப் படாதீங்க, அப்பவோட பாசத்தை புரிந்து கொள்ள முடியாத சராசரி பையன் தான் நானும். ஒத்துக்கிறேன்.
சமீபகாலமா எங்க அப்பா செல்லுல இருந்து என்னோட ஸ்க்கூல்ல படிச்சவன், என்கூட காலேஜ்ல படிச்சவன்னு வரிசையா போன் போட்டுக்கிட்டே இருந்தாய்ங்க, டை நீ எப்டிடா எங்கப்பா செல்லுல இருந்து கால் பண்ணுறன்னு கேட்டா , "வழில அப்பாவா பாத்தேன் மச்சி உன் பிரண்டுகிட்ட பேசுறியானு கேட்டு போனப் போட்டுக் குடுத்துட்டார்"ன்னு சொல்லுவாயிங்க.
இப்படித்தான் ஒரு நாள் அவர் செல்லுல இருந்து ஒருத்தன் போன் பண்ணி "ஹலோ நான் நாராயணன் பேசுறேன்னு சொன்னான். எனக்கு யாருன்னு ஞாபகம் வரல, மெல்ல அவன்கிட்ட , ஏங்க  நீங்க யாருன்னே எனக்கு ஞாபகம் இல்ல சாரின்னு சொன்னேன். அதுக்கு அவன் "எனக்கும் உங்கள யாருன்னே தெரியாதுங்க வழில ஒருத்தர் என்ன பாத்து, "தம்பி உன் பேரு நாராயணன் தான உங்கூடதான் எம்பைய்யன் எல்கேஜி வர படிச்சான், அவன கொண்டந்து ஸ்கூலுக்கு விடம்போது உன்ன பாத்துருக்கேன்னு சொன்னாரு, சொல்லிட்டு போனையும் போட்டு குடுத்தாரு" அவன் சொல்லி முடிக்குறதுக்குள நான் நினைவிழந்து கோமா ஸ்டேஜய்  நோக்கி போய் கொண்டிருந்தேன். 

அப்பாக்களை பற்றிய எனது பழைய கவிதை ஒன்று,
"எனது கழுத்துக்கு
தங்கத்தில் சங்கிலி
வாங்கிப் போட்ட அப்பா
காலில் பிய்ந்து தொங்கிய
செருப்பை கவனிக்க
மறுத்து விட்டார்."

No comments:

Post a Comment

சொலவடை