சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Wednesday, April 4, 2012

நல்லது செய்ய எதுக்கு கூச்சம் ...


                                         அப்போ நான் திருநெல்வேலில படிச்க்கிட்டு இருந்த சமயம் , ஊருக்கு போறதுக்காக பஸ் ஏறி உக்காந்தேன் . நான் ஏறின அதே பஸ்சுல அழுக்கு டிரஸ் போட்ட  பெரியவர் ஒருத்தர்  மூணு பேர் உக்காரவேண்டிய ஒரு சீட்டுல படுத்துக்கிடந்தார் . பஸ்சில் கூட்டம் சேர்ந்தவுடனே எழுந்து உக்காந்துட்டாரு ஆனா அவரு பக்கத்துல உக்காரதுக்கு யாருக்குமே மனசு வரல , கடைசியா கூட்டம் அதிகமாகி அவர் பக்கத்துல ரெண்டு பேரு உக்காந்துட்டாங்க . நான் கடைசி சீட்டுல உக்காந்து இருந்தேன் . அவரு எனக்கு ஒரு ரெண்டு சீட்டு தள்ளி உக்காந்து இருந்தாரு, மதுரைக்கி அவர் டிக்கெட் கேட்டது என் காதில் நன்றாகவே விழுந்தது . அருவருப்பை மீறிய பரிதாபத்துடன் அவரை எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்க அவரோ ஒரு சின்னக் குழந்தை சாப்பிட்டுக் கொண்டிருந்த ரொட்டித் துண்டையே பார்த்துக் கொண்டிருந்தார். பஸ் ஒரு மணி நேரம் கழித்து கேண்டீனில் நின்றது , அவரர் தாங்கள் சாப்பிட ஏதாவது வாங்கிக் கொண்டு பஸ்ஸில் ஏறினார்கள் , என்னிடம் இருந்த கடைசி பத்து ரூபாயை கொண்டு ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கிக் கொண்டு வண்டியில் ஏறினேன் . எல்லோரும்  தாங்கள் வாங்கிய தின் பண்டங்களை கொறிக்க தொடங்கினார்கள் . எங்கேயாவது ஒரு பாக்கெட்  பிரிக்கும் சத்தம் கேட்டால் ,அந்த சத்தம் வந்த திசையை நோக்கி தலை திருப்பி கையை நீட்டுவார் அந்த பெரியவர் , அவர்களும் பெரியவருக்கு  தின்ன கொஞ்சம் தருவார்கள் . என் பக்கத்தில் சுமார் முப்பது வயது இருக்கக் கூடிய ஒருவன் தான் வாங்கி வந்த கடலை பொட்டலத்தை மிகவும் நுட்பமாக யாருக்கும் சத்தம் கேட்டகாமல் மெல்ல திறந்து அந்த பெரியவருக்கு தெரியாமல் சாப்பிட்டு  முடித்து விட்டான் . இன்னொருவனோ அந்த பெரியவர் கை நீட்ட , அதை கவனிக்காதவன் போல சாப்பிட்டுக் கொண்டே இருந்தான் . இவர்களுக்கு மத்தியில் கையில் பிஸ்கட் பாக்கெட்டுடன் என்ன செய்வதென தெரியாமல் நான் உக்கார்ந்து கொண்டிருந்தேன் . பெரியவரின் கவனம் பிரிக்கப் படாத என் ரொட்டி பாக்கெட்டின் மேல் திரும்பியது ,
அவருக்கு அப்படியே கொடுத்து விடலாம் என்று எண்ணிக்கொண்டே இருக்கையில் என்னுடைய நிறுத்தம் வர இறங்கி விட்டேன் கையில் அந்த பாக்கெட்டுடன். என் பக்கத்தில்  உக்காந்திருந்த அந்த இரண்டு பேரை விட என்னை நான் கேவலமாய் உணர்ந்தேன்.

No comments:

Post a Comment

சொலவடை